Pages

Subscribe:

Monday, March 14, 2016

சந்தன மரம் வளர்க்கலாம்

                                                                           Please Subscribe : V2 Channel

உங்கள் நிலத்திலும் சந்தன மரம் வளர்க்கலாம் சட்டம் அனுமதிக்கிறது...




   தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை...

மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

எனவே கல்லுக்காடு,கரட்டுக்காடு,வறட்சியான நிலம் என எல்லா இடத்திலும் சந்தன மரம் வளருமுங்கோ...

என்ன சந்தன மரம் வளர்க்க கிளம்பலாமா....
நன்றி:இணையம் poocharam.net
------------------------------------------------------------------------------

1.இந்தியாவில் சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?


சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?
திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?
மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?
சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?
சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.

9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?
சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?
சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

இந்தியாவை பொருத்த வரையில் மரத்தின் உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை விளக்குகிறது.

Image resized to 95% of its original size [522 x 208]
Image

தற்போது அதிகரித்து வரும் சந்தன மரத் தேவையால் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை தெளிவாக விளக்குகிறது.
Image resized to 94% of its original size [527 x 349]
Image

இப்பற்றாக்குறைய போக்கவும் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவும் அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி காடுகளில் மட்டும் உற்பத்தியான சந்தன மரத்தின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நிலங்களிலும் விளைவிக்கலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது.

12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?
சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?
சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.

19. சந்தன விதை எவ்வாறு தேர்வு செய்கிறீகள்?

சந்தன விதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான செயலாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆன மரத்தில் தான் தரமான விதை கிடைக்கும்.

20. எந்த வகையான மரத்திலிருந்து (இரகம்) விதை தேர்வு செய்ய வேண்டும்?
அதிக ஆயில் தன்மையும் அதிக வாசனையும் உடைய மரத்தில் இருந்து விதை தேர்வு செய்தால தான் விளைச்சலும் இலாபமும் உறுதி செய்யப்படும்.

21.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

22.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?
1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

23. ஒரு வருடம் ஆன சந்தன கன்றுகள் எந்த நிலையிலும் வளரக்கூடியதா?
ஒரு வருடமும் அதற்கு மேலும் வளர்ந்த சந்தனக் கன்றுகள் தான் பல்வேறு வகையான சீதோஷண நிலையினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைந்த பராமரிப்பே போதுமானது.

24.இயற்கை வேளாண் முறையில் சந்தனம் கன்றுகளை வளர்ந்து தருவீர்களா?

தரமான சந்தன கன்று என்பது இயற்கை வேளாண் முறைப்படி வளரந்த சந்தன கன்றுகள் தான். இயற்கை வேளாண் முறைப்படியும் ஆர்கானின் முறைப்படியும் தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

25.சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள் சங்கம் உள்ளதா?
உள்ளது அதன் பெயர் “தென்னிந்திய நறுமண / சந்தன மூலிகை மரம் / பயிர் வளர்ப்போர் விவசாயிகள் சங்கம். அரசு பதிவு எண்: 34.VPM.2011

26.வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு சந்தன மரக் கன்றுகளை அனுப்பி வைப்பீர்களா?

வெளிநாட்டிற்கு தரமான சந்தன கன்றுகளை அனுப்பி வைக்கிறோம். தரமான விதைகளையும் அனுப்பி வைக்கிறோம்.

27.நீங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தும் சந்தன விதைகள் விலைக்கு கிடைக்குமா?

விதைகள் விற்பனைக்கு உண்டு.

28.சந்தன மரம் மூலிகை மரம்தானா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தரகளால் கண்டறியப்பட்ட சந்தன மரமானது சித்த வைத்தியத்திற்கு மூலிகையாகப் பயன்படுகிறது.

சந்தனம் அதன் நறுமணம் குணம் இன்றி மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்காக களிம்புகள், தீக்காயங்கள் மற்றும் அழுகளை தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயாரித்தலில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

29.எந்த வைத்திய முறைல் சந்தனத்தை பயன்படுத்துகிறார்கள்?
உடல் உஷ்ணத்தை தணிக்க, உஷ்ணத்தால் உண்டாகும் நோயை குணப்படுத்த சித்த வைத்திய முறையில் பல மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

30.சந்தன மரத்தில் சித்திர வேலைப்பாடுகள் நடக்கும் முக்கிய இடங்கள் எங்குள்ளது?
அங்கோலா,பெங்களூர்,கொன்னவார்,கும்தா,மைசூர்,சாகர்,சோரப்,கிர்ஸி,தால்குப்பா,திருப்பதி,சூரத், தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் ஆகும்.

31.இந்தியாவில் அதிகம் சந்தன சோப்பு தயாரிக்கும் கம்பெனியின் பெயர் சொல்ல முடியுமா?
மைசூர் சாண்டல் சோப்பு

32.சந்தன சோப்பு உடம்புக்கு குளிச்சியை தருமா?
நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.

33.சந்தன கன்று வளரும் தருணத்தில் வேர்க்கரையான் தாக்கும் வாய்ப்பு உள்ளதா?
ஒரு சில ஏரியாக்களில் வேர் கரையான் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் நடவு செய்யும்போதே குழிக்கு 200 கிராம் நயமான வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவு செய்தால் முழுமையாக வேர்க்கரையானை கட்டுப்படுத்தலாம்.

34.மண் பரிசோதனை செய்த நிலத்தில் சந்தன பயிர் செய்வது சிறந்த முறையா?
மண்ணில் கார அமில தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்ப் போல் நிலத்தை சீர் செய்து நடவு செய்தால மரம் நன்றாக வளரும்.

35.சந்தன மரம் எத்தனை ஆண்டுகளில் பயன் தரும்?

தரமான தாய் மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நாற்றுக்களை பயன்படுத்தி கவாத்து முறையில் சந்தன மரத்தினை வளர்த்தால் 10 / 12 ஆண்டுகளில் முதிர்வு தன்மைக்கு வந்துவிடும். தேவைப்பட்டால் அதிக ஆண்டுகள் வளர்க்கலாம்.

36.சந்தன மரம் உள்ள இடங்களில் அதிகம் மழை பெய்யுமா?
பொதுவாகவே சந்தன மரங்களுக்கு காற்றை குளிர்விக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் சந்தனமரம் அதிகம் உள்ள ஏரியாவில் கண்டிப்பாக மழை அதிகமாக பெய்யும்.

37.சந்தன மரம் உலக சந்தையில் அதிக வரவேற்பு அடைந்துள்ளதா?
சந்தன ஆயிலுக்கு நிகரான ஒரு ஆயில் இதுவரை எதுவும் இல்லாததாலும்,சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுவதாலும் உலக சந்தையில் சந்தனத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

38.எந்த நாட்டிற்கு சந்தன மரம் அதிகம் தேவைப்படுகிறது?

உலகத்தில் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்,ஆஸ்திரேலியா கண்டம் மேலும் முக்கியமாக இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்கு அதிகமாக தேவைப்படுகிறது.

39.சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா?
சந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.

i) சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்

ii) குமிழ் மரத்தில்

iii) மிளகு காப்பியையும்,மேலும்

iv) வாழையையும்

v) மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.

40.நீங்கள் சந்தன கன்று எந்த முறையில் உற்பத்தி செய்கிறீர்கள்?

ஏதோ ஒரு சந்தன மரத்தில் இருந்து விதை தேர்வு செய்து கன்று உற்பத்தி செய்தால் மரத்தொட தரத்திற்கும் அதன் முதிர்வு தன்மைக்கும் உத்திரவாதம் அற்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால் விதை தேர்வு செய்யும் தாய் மரமானது தரம் பிரிக்கப்பட்ட கிராப் வகையைச் சார்ந்த்தாகும்.அதனால் வாசனையும் தரமும் உறுதி செய்யப்படுகிறது.



41.சந்தன மரத்தினை விவசாயிகளே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடியுமா?

சந்தன மரத்தின் விற்பனை என்பது உலக வர்த்தகம் ஆகும்.அதனால் தான் அரசே அந்த முழுப் பொறுப்பை ஏற்று விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. சந்தன மரம் விற்பனையில் அதிகப் படியாக வருவாய் வருவதால் அரசு மூலமாக பெறும் போது வெள்ளைப் பணமாக கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.

42.சந்தன மரத்தை கவாத்து முறையில் வளர்த்தால் வைரம் அதிகமாக ஏறுமா?

கண்டிப்பாக அதிகமாக ஏறும்.மேலும் குறைந்த காலத்திலேயே மரம் முதிர்வு தன்மை அடைந்துவிடும்.

43.சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதா?
சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரமாகும்.

44.சந்தன மரம் உள்ள இடம் குளிர்ச்சியாக இருக்குமா?
காற்றை குளிர்விக்கும் தன்மை சந்தன மரத்திற்கு அதிகமாக இருப்பதால் சந்தன மரம் உள்ள இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

45.சந்தன மரம் உவளர்ப்போ அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

பட்டா நிலத்தில் சந்தன மரத்தினை நடவு செய்ய வேண்டும்.நடவு செய்த 6 மாதம் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு ஒன்றே போதுமானதாகும்.

46.சந்தன மரம் எத்தனை வகைப்படும்?
இந்தியாவில் விளையும் சந்தன மரத்தின் வகைகள்:
1.ருட் ஐ கிளாஸ்

2.ரூட் II கிளாஸ்

3.ரூட் III கிளாஸ்

4.ஜட்ஜ் போக்கல் I கிளாஸ்

5.ஜட்ஜ் போக்கல் II கிளாஸ்

6.சோட்லா

7.ஜீரியா

8.ஜெயின் பெக்கர்

9.அயன் போக்கல்

10.அயன் சில்டா

11.ஜர் சில்டா

12.அபிரியா

13.சாட்ப் சால்டா

14.மில்விடு சில்டா

15.பசோலா பக்கினி

16.ஸார்டு ரெஸ்ட்

17.ஸார்டு ருட்ஸ்

18.ஜார்புல் அட்



அயல்நாடுகளில் விளையும் வகைகள்:
1.Vilayed Both

2.China Both

3.Panjam

4.Katpattla(கட்பட்டலா)

5.Pakarjhh (பகர்தாத்)

47.எந்த வகையான கன்று விவசாயிகளுக்கு உகந்தது?
எல்லா சீதோஷண நிலையையும் தாங்கி வளரக்கூடிய சந்தனகன்றுதான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாகும்.

சந்தன மரத்தின் மதிப்பானது மண்ணிற்கு அடியில் மதிப்பு அதிகம்,அதனால் பூமிக்கு அடியில் நன்கு விளையக்கூடியதும்,மண்ணிற்கு மேலும் நல்ல வளர்ச்சி அடையும் ஜட்ஜ் போகல் ஐ கிளாஸ் இரகம் தான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாக உள்ளது.

48.சந்தன கன்றுகள் எத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழும்?
சந்தன மரத்தின் சராசரி ஆயுள் காலம் 40 / 45 ஆண்டுகள் ஆகும்

49.சந்தன இலையில் சந்தன வாசனை வருமா?
சந்தன இலையில் சந்தன வாசனை வராது.

50.சந்தன மரத்தில் எத்தனை ஆண்டு கழைத்து வைரம்(சேவு) ஏற ஆரம்பம் ஆகும்?

சந்தன மரத்தில் 4 ஆண்டு கழித்து சேவு ஏற ஆரம்பம் ஆகும்.

51.சந்தன மரத்தில் எந்த பாகத்தில் ஆயில் எடுக்க பயன்படுகிறது?
சந்தன மரத்தின் வைரக் கட்டை மற்றும் வேர்ப்பகுதியில் இருந்து ஆயில் எடுக்கப்படுகிறது.

52.சந்தன மரத்தை ஒரு விவசாயி விற்பனை செய்ய உரிமை இருக்கிறதா?
சந்தன மரத்தை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு.

53.சந்தன மரத்தை விலை நிர்ணயம் செய்வது யார்?
பப்ளிக் டெண்டர் மூலமாக விலை நிர்ணயம் நடைபெறூம்,ஆனால் விவாசாயியின் முழு சம்மதத்துடன் தான் விற்பனை செய்ய முடியும்.விலை கட்டுப்படி இல்லை என்றால் 6 மாதமோ அல்லது 1 வருடம் கழித்தோ விற்பனை செய்ய விவசாயிக்கு முழு உரிமை உண்டு.

54.சந்தன மர விற்பனை(பப்ளிக் டெண்டர்) எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

பப்ளிக் டெண்டர் மாதா மாதம் நடைபெறுகிறது.

55.சந்தன மரத்தை விற்பனை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?
மாவட்ட வன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

56.எந்த வகை சந்தன மரத்தில் பர்னிச்சர் செய்ய முடியும்?
பர்னிச்சர் செய்ய 15 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரத்தில் இருந்துதான் தயாரிக்க முடியும்.

57. 1 ஏக்கரில் எத்தனை சந்தன மரங்கள் நடவு செய்யலாம்?
8x8 அடி இடைவெளியில் 680 மரங்களையும்,

9x9 அடி இடைவெளியில் 537 மரங்களையும் நடவு செய்யலாம்.

58. ஒரு ஏக்கரில் சந்தனம் குறைந்த முதிர்வில் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
ஒரு மரத்தில் குறைந்த அளவு 30 கிலோ சந்தன கட்டை கிடைத்தாலும் 550x30=16500 கிலோ. ஒரு கிலோ சந்தன கட்டை சராசரியாக ரூ.5000 விற்பனை ஆனால் கூட 16500x5000=ரூ.8,25,00,000./- அதில் பாதி அளவு கிடைத்தால் கூட ஏக்கருக்கு 4 கோடி ரூபாய் வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம்.

59.சந்தன கன்றுகளை எந்த நோய் தாக்கும்?
1.இலையுண்ணி பூச்சிகள்

2.இலையுண்ணும் வண்டுகள்

3.வெட்டுக்கிளிகள்

4.சாறு உரிஞ்சும் பூச்சிகள்

5.துளைப்பான்கள்

6.வேர்க்கரையான்கள்

60.சந்தனத்திற்கு அடியுரமாக எதை இடவேண்டும்?
நன்கு மக்கிய சாண எரு வேப்பம் புண்ணாக்கு,மண்புழு உரம் வரை கரையான் தொல்லையில் இருந்து மரத்தை பாதுகாக்கலாம்.

61.எனக்கு நிலம் இல்லை, ஆனால் நான் சந்தன விவசாயம் செய்ய முடியுமா?
சந்தனைத்தை நில உரிமையாளரும் வளர்க்கலாம். அல்லது குத்தகைதார்ரும் வளர்க்கலாம். அதாவது குத்தகை ஒப்பந்தம் செய்து சந்தன மரத்தினை வளர்க்கலாம். அவ்வாறு வளர்த்தால் குத்தகைதார்ருக்கே சந்தன மரம் சொந்தமாகும்.

62.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 வருடங்களுக்கு மேல் ஆன சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யலாம்.

63.மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டு அமைத்தது.அதில் சந்தனம் இடம் பெற்றுள்ளதா?
மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டில் சந்தன மரம் இடம் பெற்றுள்ளது.

64.தமிழ்நாட்டில் எந்த எந்த ஆண்டு சந்தனம் மரம் வளர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது?
அரசு ஆணையானது 2002 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

65.வனத்துறையினருக்கு விவசாயிகள் எவ்வளவு வரியும்,சந்தனம் விற்றுக் கொடுக்கும் செலவும் கட்ட வேண்டும்?

சந்தன மரத்தினை விற்பனை செய்யும்போது அதன் முழு மதிப்பீட்டில் 10% தொகையும்,கட்டிங் எடுத்து விற்பனை செய்யும் செலவிற்காக 10% கட்ட வேண்டும்.

66.சந்தனத்தை சாகுபடி செய்யும் போது அரசு எந்த முறைப்படி பணத்தை பட்டுவாடா செய்யும்?
மரத்தின் உரிமையாளருக்கு மொத்த விலையில் 20 வீதம் 30 நாட்களுக்குள்ளும்,மீதித்தொகை 90 நாட்களுக்குள்ளும் தரப்பட வேண்டும்.

67.விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை வனத்துறையினருக்கு உள்ளதா?

சந்தன மரங்கள் பெரிதாகி அதன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒரு சில ஏரியாக்களில் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்து பாதுக்காப்பிற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். சந்தன மரத்தை பாதுக்காப்பது வனத்துறையினரின் முழு பொறுப்பாகும். அனைத்து மரங்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு செய்வார்கள்.

68.சொட்டு நீர் பாசனம் அமைத்து சந்தன மரத்தை வளர்க்கலாமா?

சொட்டு நீர் பாசனத்தில் சந்தன மரத்தை வளர்த்தால் சந்தன மரத்தின் வளர்ச்சி 15% முதல் 20% வரை வளர்ச்சி கூடுதலாக இருக்கும். சொட்டு நீர் பாசனத்தினால் மிக குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. தேவையான செடிக்கு மட்டும் தண்ணீர் போவதால் தேவையற்ற களைகள் முளைப்பதில்லை. அதனால் தோட்டத்தின் பராமரிப்பு மிக குறைவு. அதிகமான ஏரியாவை பாரமரிப்பதற்கு சொட்டு நீர் பாசனமே சிறந்த வழியாகும்.

69.பாதுகாப்பிற்கு சூரிய மின்வேலி அமைக்கலாமா?

1. ஆடு மாடுகளிடம் இருந்து தோட்டத்தை பராமரிப்பதற்கும்

2. மரத்தின் மதிப்பு அதிகம் ஆகும்போதும் சூரிய மின்வேலி அமைத்து பாராமரிப்பதே சிறந்த வழியாகும்.

70.என் நிலத்தில் வளரும் சந்தன மரத்தை சட்டத்தை மீறி யாரோ வெட்டினால் நான் எப்படி புகார் செய்வது?
சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தால் 30 நாட்கள் கழித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். சந்தன மரத்தின் மதிப்பானது பூமிக்கு மேல் பகுதியில் 30% பூமிக்கும் கீழ் 70% மதிப்பு தன்மை கொண்ட்தாகும். பூமிக்கு மேல் உள்ள மரம் வெட்டப்பட்டால் பூமிக்கு கீழ் உள்ல வைரத்தின்(கட்டை) மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

71.வனத்துறை மாவட்டம் தோறும் செக் போஸ்ட் அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

சந்தன மரத்தால் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டி தருவதாலும் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதாலும் சந்தன மரத்தினை தெசிய சொத்தாக கருதுவதாலும் அரசு வனத்துறையின் மூலம் கண்டிப்பாக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு செய்து தரும். அது அவர்களின் கடமையும் ஆகும்.

72.ஒரு ஏக்கரில் சராசரி எத்தனை டன் சந்தனம் எத்தனை வருடதில் விளையும்?

12 / 14 வருடத்தில் ஒரு மரத்தில் வைரம் (கட்டை) 30 கிலோ கிடைத்தாலும் ஏக்கருக்கு 53x30=15900 கிலோவாகும். 12 / 17 வருடம் வளர்த்தால் ஒரு மரத்தின் வரைம் 60 கிலோ கிடைக்கும்.அதாவது 31 டன் உறுதியாக இருக்கும்.

73.அனைத்து பட்ட நிலத்திலும் சந்தனம் வளர்க்கலமா?
அனைத்து பட்டா நிலத்திலும் சந்தனம் வளர்க்கலாம். வீடு,பள்ளி,கல்லூரி,தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் அனைத்து விவசாய பட்டா நிலங்களிலும் வளர்க்கலாம்.

74.இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் சந்தன வளர்ப்பு அரசு ஆணை உள்ளதா?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் சந்தன மரம் வளர்க்கும் அரசு ஆணை உள்ளது.

75. 2011 ஆண்டு சந்தனத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்ட்து?
ஒரு கிலோ சந்தன கட்டை அதிகபட்சமாக ரூ.7500/-

76. 5 ஆண்டுகள் கழித்து சந்தன மரத்தின் கவாத்து செய்யும் கழிவுகலை யார் அனுபதி பெற்று பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம்?

மாவட்ட வனத்துறை அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.

77.கவாத்து செய்த சந்தன குச்சிகளை விற்க வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமா?
அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும்.

78. மூலிகை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பொருட்களை காட்டில் இருந்து வெளியே கொண்டு வர மலைவாழ் பழங்குடியினருக்கு அதிகாரம் இந்திய அரசால் அளித்துள்ளது என்பது உண்மையா?
உண்மையே

79.எந்த நாட்டில் விளையும் சந்தனத்திற்கு ஆயில் அதிகம் எடுக்க முடியும்?
இந்திய சந்தனத்திற்கு தான் ஆயில் அதிகம் கிடைக்கும். தரமானதாகவும் இருக்கும்,குறிப்பாக தமிழ்நாட்டில் விளையும் சந்தனத்திற்கு தான் ஆயில் தன்மையும் வாசனையும் அதிகம் இருக்கும்.

80.நறுமணம் அதிகம் வீசும் சந்தனத்திற்கு பெயர் என்ன?

வாசனை சந்தனம் அல்லது ஜவ்வாது சந்தனம்

81.சந்தன மரம் அதிவேகமாக வளரக்கூடியதா?
சந்தனம் மெதுவாக வளரக்கூடிய மரமாகும்.குறிப்பாக வேம்பின் சாராசரி வளர்ச்சி அளவுக்கு சந்தனம் இருக்கும்.

82.எங்கள் வீடுகளில் வளர்க்கும் சந்தன மரத்தினை அரசுக்கு வரி கட்டிவிட்டு வெட்டிக்கொள்ளலாமா?

வரி கட்டி விட்டு நாம் பயன்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை உண்டு.

83.சந்தன கன்று நடவு செய்யும் பருவகாலம் உண்டா?

சந்தன கன்று நடவுக்கு எல்லா பருவகாலமும் உகந்ததே.

மானாவாரியான நிலங்களில் அனைத்து காலங்களிலும்

தோட்டத்தில் அதிகம் மழை பெய்யும் காலத்தை தவிர்த்தும் நடவு செய்ய வேண்டும்.

84.மழைநீர் தேங்கி இருக்கும் நிலத்தில் சந்தனம் பயிர் நடலாமா?
வடிகால் வசதியுள்ள நிலத்தில் நடவு செய்யலாம.

குறைந்த பட்சம் 2 / 3 வாரங்களுக்கும் அதிகபட்சம் 3 / 4 வாரம் வரை நீர் தேங்கி நிற்கும் காலக்கட்டத்தில் நடவு செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

85.வேப்பம் (வேம்பு) மரமும் சந்தன மரமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்த்து?
வேம்பும் சந்தனமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது.வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கு சந்தனமும் வளரும்.

86.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 / 7 ஆண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களுக்கு காப்பீடு செய்யும் வசதியுள்ளது.

87.சந்தனத்தை எவ்வளவு ஆழம் குழி எடுட்து நடவு செய்ய வேண்டும்?
மண் தன்மை ஆழமாக உள்ள நிலத்தில் 1x1x1 அடி நீளம் அகலம் ஆழம் குழி எடுத்தும்,

மண் தன்மை ஆழத்தில் குறைவாக இருந்தால 2x2x2 நீளம் அகலம் ஆழம் குழி எடுத்து நடவு செய்யலாம்.

88.குழி மூடுவதும் சந்தனம் நடவு செய்வதும் ஒன்றாக செய்யலாமா?
குழி எடுத்து இரண்டு நாள் கழித்து பூமியின் மண், எரு,வேப்பம் புண்ணாக்கு கலந்து மூடி தண்ணீர் விட்டு பிறகுத் நடவு செய்ய வேண்டும்.

89.நடவு செய்ய ஏற்ற நேரம் எது?

மாலை நேரத்தில் நடவு செய்வதே மிக சிறந்த வழியாகும்.வெயில் இல்லை என்றால் காலையில் நடவு செய்யலாம்.

90.நாற்று இடம் மாற்றம் செய்து எத்தனை நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும்?

குறைந்தது 10 நாட்கள் அல்லது இரண்டு வாரம் கழித்து மாற்றப்பட்ட ஏரியாவில் தண்ணீர் விட்டு அந்த சீதோஷண நிலைக்கு மாற்றம் செய்து நடவு செய்ய வேண்டும்.

91.பாதுகாப்பிற்காக தாங்கள் காட்டும் உச்ச கட்ட வழிமுறை?

சந்தன மரம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரம். அதனால் 4 / 5 ஆண்டுகள் கழித்து வருடத்திற்கு ஒரு முறை தரையோடு வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் பூமிக்கு அடியில் வேர்கட்டை நன்கு குறைந்த காலத்திலேயே முதிர்வு தன்மை பெற்று மரம் விளைந்து விடும் பாதுகாப்பு பிரச்சனை என்பதே இந்த முறையில் மரம் வளர்த்தால் இல்லவே இல்லை.

92.ஆர்டர் கொடுத்தால் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பீர்களா?

· ஆர்டரின் பேரில் நிறுவனமே ஆட்களை வைத்து குழி எடுத்து நடவும் செய்து கொடுக்கும்.

· மேலும் தோட்டத்தை சுற்றி சூரிய மின்சார வேலி அமைத்தும்

· சொட்டு நீர் பாசன வசதியையும் அமைத்து கொடுக்கும்.

சந்தன கன்றின் விலை நிலவரம் என்ன?

Image resized to 81% of its original size [617 x 230]
Image





Image by FlamingText.com

2 comments:

Unknown said...

சந்தன கன்று எங்கு கிடைக்கும். முகவரி குடுங்க பிலீஸ்

Desingh said...

சென்னையில் forest office கிண்டி அருகில் உள்ளது. அங்கு கிடைக்கும்.

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog